ஞாயிறு, 15 ஜனவரி, 2012

அய்க்கூ கவிதைகள்


191..பனிமோடம்
நடுங்கும் கதிர்கள்
ரயில் முகப்பு விளக்கு.


192..கடலோரங்கள்
காண்பதற்கு ஏது?
ஆலை மயம்.


193..வெறும் சாக்கடை
ஓகோன்னு ...இருக்கு,
தண்டுக்கீரை வயல்.


194..கானாம் வாழைக்கீரை
கன்று ஆனேன்
ஊட்டும் அத்தைமகள்.


195..தலை ஓடிந்த பப்பாளி
ஆசை விரிகிறது..
பழங்கள்.


196..செவந்தி தோட்டம்
மூக்கைத் துளைக்கும்
பூச்சி மருந்து.
                                              
197..யாருமில்லா காடு
போகுதே! சுனையில்
நாளின் உதயம

198..பூ சந்தை
புகுந்தேன்
கந்தலானது சிந்தை.

301..மருந்துக்குக் கூட
இல்லை ஒருத்தி
மகளிர் விளையாட்டு.
                               
302..இளங்கலை பெண்
உறுதி யானாள்
கை'நாட்டு' பணக்காரன்.


303..யாரும் பேசுவதில்லை
அதிகமாய்...
அப்பா.


304..கைவிரித்தோம்
கைவிரித்தது
கை.


305..பரீச்சைக்கு
பத்திரப்படுத்தினாள்
பழைய நாள்காட்டி.



306..மரத்தடி
இன்பலேகியம்
தென்றல்.


307.குரலைச் சேகரிக்கிறான்
தவளை ஆய்வாளன்
தோழிகளோடு காதலி..


திங்கள், 22 ஆகஸ்ட், 2011

                                             அம்பானி ஊரில்....
                                                          அய்கூத் தொகுதி...
                                                                  முன்னுரை..                                                                                                                                                                                                                                                                                               


1.சுத்த புத்தியும் தெளியும் தான் கவிதையா?
 உத்தி எங்கிருந்து உதிரமாகிறது?
புத்தி மேட்டிமையால் கட்டமைக்கப்படுகிறதா?                                    
எது கவிதையில் தூக்கலாகவும் தூங்கலாகவும் முகங் காட்டணும் ?
பளீச்செனவும் பளாரெனவும் கருத்தை கவனத்தை அகமார்ந்த
வன்ம ஈர்ப்பை மூளை நெருடலை முனகல் சுவாசக் குளறலை
ஐம்புலனில் எவ்விடத்தில் எல்லாம் கிளூகிளூப்பை மிடுக்கார்ந்த
சிலுசிலுப்பைக் கைகுலுக்கிப் போக வேண்டும் கவிதை ?

2.தெளிவின்மை தூசு படர்ந்தமை புதிர்மை உயிர் உருக்குமை,
இன்னார்ந்த பரிமாணங்களில் கழுத்து வலிக்க
விறகு சுமந்து அலையும் மூதாட்டி பளு ஏந்தியா,கவிதை ?
வெறும் துளிப்பா தொகுப்பையோ,சென்ரியுத் தொகுதியையோ,
லிமரைக்கூப் பிரதியையோ,வைத்து ஆன்மச் செல்களை ஆனந்தப்
படுத்தி,அமைதிப்படுத்தி,குளிரவிக்கிற,மேதமை வாசகனோ,துருவித்துருவி
துழாவி,குடைந்து சலிக்காது,ரசிக்கும் ரசிகனோ அல்ல,நான் .

3.அறிவாளித்தனக் கவிதை_இறுதிவரியை,தூக்கி இடுப்பில் அமர்த்தியோ,
தலையில் வைத்தோ,என்னால் ஆடுகிற,மேன்மட்டக் குணாம்ச நீதி வழிகிற
ரீதியிலான திறன் நுட்பங்கள் என யாவுமற்ற,ஓர் பாமர நடத்தைகளினூடே
சிற்சில மின்மினி தரிசனப் பாத்தியமும் எட்டிப் பார்ப்பதுண்டு
அவ்வப்போது அந்த அளவில் தான் நான் .
இந்த வாழ்க்கை  வெறுமை,மேம்போக்குத்தனத்தையும் அன்றி வேறு
ஒத்துழைத்த மாதிரி இம்மட்டளவிலும் தென்பட்டதில்லை எனக்குள்.

4.வானந்தரப் பொருண்மையில் எதற்கும் வக்கற்ற இருண்மையில் ,
பிழிந்தெடுத்த கண்ணீ ர் தோறும் திரண்டெழும் அகப்போரில் முதுகுத்தண்டு
உளவும்,இலவுமான சொற்குழுமத்தில் சிலதான சில்மிசக் கறார் மிக்க 
சணுங்கலும், குலுங்கலுமான,கம்பீர கனிவுத் தெளிக்கும்,
வார்த்தைகளை வரவேற்று அரியாசனம் இடுகிறேன்,சிறிதேனும்
சிறுமூளையின் பங்கு தலைக்காட்டி விடக் கூடாதென்கிற
சிரத்தையூடான அச்ச்த்தில்.!

5.உணர்விலிருந்து வரும்போது பாதியும் ஏட்டில் விழும்போது மீதியும்
உணர்ச்சித்துடிப்பு உறிஞ்சிப் போய் விடுகிறது. இன்னும் அச்சேறும் போதினிலோ முற்றுமாக அழிந்துவிடுகிறதே! பெரும்பாலான
மெய்ப்பாடுகள்!.
இருப்பினும் வலித்து வழிந்து திணித்து துருத்தி பருவ உந்துதலை,
கட்டுக் கோப்பை முறுக்கை,முருகை வேர்மைத் திகட்டலை,
பக்குவ வேட்பையும்,எல்லாமுமான ஏகாந்த வெளியை,
வெற்றிடத்தொனியை,வெளிச்சமிட்டு காட்டும்,மென்வக்கிரம்,
சிலபோது இரைந்து ஓடுகிறது. வேலி மீறி இதயவெளி,சில கவிதைகளினூடாக!.
6.எதை நிருபித்தால் கவிதை? நிர்ணயச் சட்டம் கொண்டதா கவிதை
ஈராக் யுத்தக் கள ரத்தத்திலும்,நம் ஊர் பொட்டல் வெளி வரப்புச்
சிக்கல் குருதியிலும் அதே தொன்மச் செல்களே,அப்புறமேன் விருந்து
விருது வித்தியாசம்? உதைக்கிறது எங்கோ?, மூளை அணுக்களும்
இதய ரணங்களும் இணைவிக்கும் போதில் எடுத்து விடலும்,
மாற்றிப் போடலும்,இயல்பாம்சம் எல்லாக் கணங்களிலும் கண்
சிமிட்டத் தயார்,என்கிற கவிதைப் பொழுதுகள் கானல்வெளியில்
கண்டெத்தவை அல்ல!.

7.படிந்து படிந்து நொறுங்கித் தெறிக்கும் பிசிறு வைரங்கள் பிரசவ
நொடிகளில் பிரிந்து பிரவேசிக்கிறது மறுபொதில் பிறப்பதற்கான
ஒரு மரணம்!
கெட்டிக்காரத்தனம் பக்கத்துக்குப் பக்கம் நீர் மெத்தையிட்டுப்
படுத்திருக்கும் ஓரே குறிப்புத் தொனி வாய்ப்பாட்டு உத்தியில்!
திரைக்கதைபோல் நாயகனைப் படுநல்லவனாக, நறுஞ்சூழலாக
அமைத்து, சுண்டக் காய்ச்சி, நல்லவேளை சீவார்த்தங்கள்
தீய்ந்துப் போக விடமால் சிலவேனும் தப்பித்து விடுகின்றன.!
எல்லாம் உள்ளன வாழ்க்கை என்பதைக் கவிதையும் காட்ட
வேண்டும் என்கிற தார்மீகத் தவிப்புத் தாகம் என்னில் உண்டு.
என்றும்! சொல்லும்படி இருக்கணும்! சொல்நயம் சிறக்கணும்
அலங்காரத் தேர்வலம் என எந்த கோட்பாட்டு நெறியும்
கையாளாது மழலையின் நிர்வாணமாய் மழ்ச்சியுடன்
கைநீட்ட விட்டு தூக்கிக் கொள்ளுங்கள்!.

8.உலகளாவிய அங்கீகாரம்,ஓன்றும் அற்ற கவிதைக்கு
ஒரீரண்டு எழுதிய பலருக்கு வயிற்றெரிச்சலை,
சமூக ஒரு பட்சமான சாய்வுகளை, சந்தர்ப்பங்களை,வாரிக்
கொட்டுகின்றன!.
பன்மொழி திறத்த ஆட்களும் சரி, ஒருமொழி திறமற்ற ஆட்களும்
சரி,கவிதை என்பது வாழ்ந்து எழு(து)வது வாசித்தெழுதுவது அல்ல,
என்கிற சூட்சுமச் சூத்திரம் சுரக்கவே இல்லை பலருக்கும்!.காலக் கட்டமும்
பருவச்சூழல் திட்டமும் என்னாதான் அனைத்தும் ஒருங்கிணைந்த
ஒன்றான கவிதை இது என்ற கூற்றை எதிர் நிறுத்தினாலும் ஏதோ பல
விட்டுப் போன மாதிரியான உறுத்தல்,உந்துதல்கள்,உசுப்பிவிடாமல்
இல்லை.அந்தக் கவிதையில் என்றும்,பூதாகரத்தையே, மக்கள்
தூக்கிப் பிடித்தாலும்,எல்லைச் சொல்லி இறக்கிவிடும் மனோபாவத்தில்
தான் நான் என்றும் இருப்பேன்.

9.காரணம் மீறிய கவர்ச்சி,இதயம் மீறிய ஈர்ப்பு,இணைந்து ஓடினாலும்
இன்னும் தேவைப்படுகிறது, தாலி கட்டும் தருணக் கிரையத்திற்கு!.
தொடர் ஆளுமைக்கு ஆட்பட்பதால், நடுநடுவே சில நரை விழுந்திருக்கலாம்
பெருமிதம் விடும் வளமை, கவிதை மீமேலான கவன ஒன்றிப்பு,கண்களில்
இறங்கும் வெள்ளி இழைகளினூடே விளங்காத, விலங்காகாத விரசங்கள்
யாவும் புலம்பெயரப் போவதில்லை!.
மூன்று வரி கவிதைகள் என்று அய்கூவைத் தானப்படுத்திய திரு.பொன்.குமார்
அவர்களுக்கு மெய்மிகு நன்றிகள்.மற்றும் உங்களுக்கும்!.

நெஞ்சுவிலா  பதியும்  
பஞ்சுநிலா தமிழில்
ப.தமிழாளி.                                                                                   
                                              








146. சக்கரம்
          சுற்றினாள்
             வந்துவிடுமோ! பானை.

147.அலுமினியப்பாத்திர ஆலை
         கசாலாய்க் கிடக்கிறது
           தொழிலாளர் மேனி.

148.முக்காலியும்
          ஆகாமல் போனது
              ஒருகால் இழந்த நாற்காலி.

149.உயர் மிகு மஞ்சம்
         துயில்விடுமோ!
            துயர் நெஞ்சம்.

150.செங்கல்
         சூளைக்கு
              விறகாகும் பனம்பழங்கள்.

151.மிதி வண்டி
     டெம்பொ அகலம்
       காலிக் குடங்கள்.

152.கண்ணாடிப் பேழையில்
         கோசா பழக் கீத்துகள்
              ஈக்களாய் சுற்றுபுரம்.


153.மின்தறிகள் அறை
         ஆச்சரியம்
             உறங்கும் குழந்தை.

154.காலி பாத்திரம்
          புன்னகை வீசுகிறது
             பசி.

155.கொசகொசன்னு
            கத்திரி படாத காடு
               பாவாணர் அய்யா மீசை. 

156.இந்தியா-பாகிஸ்தான் மோதல்
         குசியாயினர் ரசிகர்கள்
             அழகிகள் குத்தாட்டம்.


157.கேட்டே வந்தது
           நகரத்து வீட்டில்
              குடிநீர்.

158.தட்டு நறுக்குச் சத்தம்
    எழ வில்லை
            வளையோசை.

159.நகர வாசல்களில்
         முன்னிரவே விடிகிறது
               காலைநேரக் கோலம்.

160.மின் தடை இரவு
         நிமையத்தில் விலகியது
             எண்வடிவ மெழுகொளி.

161.உறிஞ்சும் கைம்பெண் உதடு
          மோட்சம் கண்டன
                சில்லிப் பூக்கள்.

162.சொன்னதைச் சொல்லும்
            கிளிப் பிள்ளையோ!
               மலை எதிரொலி.

163.இலக்கியம்
         தெரிந்தவர்களுக்கே கிடைக்கிறது
              பரிசும் பாராட்டும்.

164.கால்வாய் பாசனமின்றி
          மருதம் விளைவிக்கிறது
              புழுதிக் காற்று.

165.பெரியவர்கள் பேச்சிலே
            இருக்கின்றன அதிகம்
               குழந்தைப் பாடல்கள்.

166.கிணற்று நீருமின்றி
         தேசிய விளையாட்டு
              பன்னீரில் மட்டைப் பந்து.

167.ரொம்ப நாடுகளில்
           வாழ்கிறவன் வாடுகிறவன்
                ஞாலத்தில் தமிழன்.


168.நிறுவன இஷ்டம்
         கடைகாரர் கஷ்டம்
            காலாவதி மருந்து.

169.ஏன் எடுப்பதில்லை?
          நடிகைப் போன்றதோர்
         நடிகர் நீலப் படம்.

170.சர்ன்னு விடுகிறாள்,புவனா
          மாமாவுக்கு வரவில்லை
             தவளைக்கல் விளையாட்டு.
171.இருந்ததில்லை
           பார்த்து வளர்த்தும்
             தப்புச் செடி பலன்.

172.கீற்றுப் பந்தலில்
     இரைந்தன பொற்காசுகள்
       வெளிச்சம்.

173.சடைப்பிடித்து தொங்குது
     நகரக் கம்பங்களில்
       மின் ஒயர்கள்.

174.மூன்றாம் வகுப்பு கட்டணம்
     முகம் சுளிக்க வைக்கும்
        போதைப்பாக்கு எச்சில்.

175.எப்பவும்
     அழுத்தமாய் வருதே!
       பிவிசி பைப் கத்திரிப்பு.


176.அலங்காரம் இல்லை
     வண்ண உடை வாழ்வு
       கணினியுக விதவை.

177.தலையணைச் செய்பவள்
     தூங்குவதோ….!
        கைவைத்து.

178.கதிர் கட்டுகள்
     கனிந்தது வெதுவெதுப்பில்
       பப்பாளிக் காய்.

 179.அரும்புத்திரன் வரான்
     தந்தைக் கூவல்
       அதுக்கு இரை போடுங்க.

 180.தெவத்துப் பூசை
          சொளிக்கிறது கூடையில்
             தென்னம் பொட(படவை)


 181.முட்டைக் கோசு
          கழிவுகளில் கலகம்
       பன்றிப் பறழ்கள்.


182.இரும்புச் சிறை
     தாய்மடியில் குறும்பு
       சிங்கக் குருளை.


183.பழைய துணிகளின்
      கொள்கலன்
        ஏழைகள் தலையணை.


184.வள்ளலார் பாடம்
     தெரியாத மாணவி
        போதனை பிரம்படி.




185.வித்தியாசக் குரல்
      பூரிப்பிடுகிறாள்
        ஓசு பைப்பில் குழந்தை.

186.டார்ச்லைட் எரிய
      கை மறைத்தேன்
        பழுத்த இரும்புக் காட்சி.

187.லிவர்மேல் குதிகுதிக்க
      பிடுங்கி அடித்தது
        சுமையுந்து சக்கர போல்ட்.


188.முடிவெட்டிக் கொள்ளுதோ!
       இயந்திர ரம்பத்தில்
         தடுப்புச்சுவர் புல்வெளி.

189.திருகினாள் ஆகர்பிட் 
      பொத்தது.
         காதல்பலகை.


190.கொழிஞ்சிக் காரத் தாத்தா
       சிறாருக்கு நகைப்பு
         மட்காடுபோன மிதிவண்டி.

191.தனித்து தெரியும்
      கண்ணாடி அறையில்
        பார்வையாளர் வட்டம்.

192.இரும்புத் தோண்டி
      துளைக்கும் இரைச்சல்
        நண்டுகள்.
193.படி மல்லிக்கு ரூவா
       மறுக்கும் காட்டுக்காரன்
          ஐந்தாறு பிஞ்சுப்பூக்கள்.

194.இளஞ்சோளப் பயிர்
      சொக்குதே!ஐம்புலன்
         மரித்தது செம்மறி.
195.உணவு நேரமும்
     நடக்குது வேலை
       மின்சாதனங்கள்
196.அதிகாலை
      வயல்வெளி எங்கும்
        மருந்தடிக்கும் கூச்சல்.


197.வாரத்தில் அப்பத்தாவுக்கு 
      எட்டுநாள் உணவு
        தாளித்த குச்சிக்கிழங்கு.


198.அக்கா ஓடிய பிறகு
      அடுப்புக்குப் போனது
         களி துடுப்பு இரண்டும்.


199.101இலும் இருந்ததாம்
      சுவர்மண் பல்தேய்த்த
        பாட்டி பற்கள்.

200.சட்டி பானைங்க
     இன்றும் ஆயா வீட்டில்
       ஊணாங்கொடி பிரமணை.

201.வயசுப் பெண்ணை தடுத்தாள்
      ஈச்சம்பழத்திற்குத் தாய்
        களிகெவை.


202.நான்கே தாவணிகளில்
      பெற்று விட்டாள்
         இளங்கலை அறிவியல்.


203.பலருக்கு ஓரிரு மாதம்
      மூன்றாம் நாளே வரும்
         இன்றைய என் சட்டை.

204.காலியாகும் வீடு
      விட்டுவந்தது அட்டால்
        காலொடிந்த சந்துவமனை.

205.சுத்தம் இருந்தும்
      வெசனப்படும் இளமை
          கழுத்துபட்டை கிழிசல்.



206.தென்னையில் தவற
       கல்லிட்டு அனுப்பினாள்
         கோவணத்துள் தாய்.


207.விதவித காலணிகள்
       மயங்குது கல்லூரிக்குள்
          தேய்ந்த என் பேரகான்.


208.இடம்பிடித்து விடுகிறது
      ஒவ்வொரு நேர்காணலிலும்
         காங்கிரீட் கேள்வி_பதில்.

209.கால் நீட்டித் தூக்கம்
      தலைமாட்டுப் பக்கம்
         கோழிச்சோட்டு நாய்.

210.நீர் தொட்டி நினைவு
     நேரும் நாத்தனாவுக்கு
        சாக்கிட்டு கொன்ற பூனை.


211.நாடா உட்காந்தது

             மகிழும் நெசவாளி
                   போனது ஓரிரு இழை.

212.அப்பா மிதிவண்டியில்
       விழுந்தாள் பாவாடை சிக்கி
          கொரங்குபல்லில் பழக.


213.பொடணியைத் தட்டினான்
        எதிர்த்து அடித்தது
          கிரிஸ் கன்.

214.சாமி சொலியே பேசுகிறார்
      கந்தாயம் வசூலித்து
        நடக்கும் தோட்டி.


215.வேட்டை கறி
      சிக்கும் பல்லில்
        பால்ரஸ் ரவைகள்.

216.ஆட்டுக்காரம்மா பேத்தி
      சுத்தியே இருக்கிறாள்
        பழைய பேரிங்.


217.அந்த நிர்வாணச் சிறுமிக்கு
       வாங்கித் தருவது யார்?
         பேரிக்கா கீத்து.


218.வாசல் தொடங்கி
    சமையலில் இறங்கியது
      ஏத்தி சொருகிய தாவணி.


219.கொட்டமுத்து செடி நீ
       நொணா வரை நான்
          உப்புக்கட்டி தூக்கு.


220.புதிய மகிழுந்து
      எழும்பும் பாலுணர்ச்சி
         அறிமுகப்படுத்தும் நடிகை.


221.குறுக்கே வந்தாள்
      சூழ்ந்தது யாக்கை
        ஆரிய லட்டு.

222.சங்காயம் சறுக்கிட
      லாவகமாய் சுதாரித்தது
        பொறத்தாங்காலில் தாம்புமாடு.


223.அணுஅளவு பிரகாசம்
       இருட்டில் சாத்தியம்!
         சாணைப் பொறி.

224.நெட்டி முறித்தேன்
       பிரளைய வலி
          கெண்டைக்கால் கொரக்குலி.


225.எழிலானவை பொருட்கள்
      ஏச்சுகள்தான் அசிங்கம்
        செருப்பு சீமாறு கெட்டவார்த்தை.

226.நிறைய விருந்தோம்பல்களை
        கத்திசல்லைக் கொண்டே…
           இளநீர் சமர்பிக்கும் அன்னை.



227.சொங்கை   நிமிட்டி
          சகலை ஈன்ற பச்சைக்கம்பில்
           பிரிந்த அண்ணன் நேசம்.




228.பப்பாளி விதைகள்
      பிதுக்கி விளையாடினோம்
         காதல் முன் பருவம்.

229.தலைவர் சிலைக்கு
      அனுமதிக்க வில்லை
         வேறுசாதி தொகுதி.

230.உன் நா கவி
      உடலெங்கும் பேச…
        வேண்டும் ராணுவ பலம்.


231.டூப்லைட் என்கும்
      குழவியர்
        கைகளில் வாழைத்தண்டு.

232.தேநீர்
     அனல் வீசியது
       கடன் பேச்சு.


233.மாலை நேரம்
       திரும்பிக் கொண்டிருக்கிறது
         மேய்ச்சல் கூட்டம்.

234.கிச்சுகிச்சது யாரோ!
      கெக்கலிக்கிறது..
         பருத்திக்காடு.

235.பிராய்டிசம் பார்
      கெடாய்மேலேறும்
        ஆட்டுக்குட்டி.

236.அடுத்த வீட்டுக்கே
      தெரியவில்லை
         ஐந்தாறு நூல் கவிஞன்.

237.காய்ந்த செடி
      புணர்ச்சியில்
        ஈக்கள்.

238.யார் கடந்தாலும்
       நிற்பாள் வினாடிகள் சில
        வழியோரம் துவைக்கும் மடந்தை.


239.ஆழாக்கு புழுங்கரிசி
      தாவணி முடிஞ்சுப் போனாள்
        தண்ணீர் பாய்ச்ச,கம்பங்காடு.

செவ்வாய், 5 ஜூலை, 2011

அய்க்கூ கவிதைகள்

11.அணிகையில் அழுதாள்
அவிழ்க்கவும் அழுகிறாள்
குழந்தைப் புதிர்!.

12.படர்ந்திருக்கின்றன
ஏலக்காய்  எங்கும்
செவ்வெறும்புகள்


13.பிரபஞ்ச மீசை
மொழி முதுகெலும்பு
மௌனம்.

14.குப்பையில் உணவு
உறக்கம் தெருவில்
கோயில் மாடு.

15.இலையுதிர் மரம்
வயசுக்கு வந்தது
இலவம்பஞ்சு!






























16.தங்கமோதிரம்
அருவருக்கிறது
நைந்த நூல் சுற்று.

17.பாதையில் வானவில்
சிதறியது வண்டியடித்து
மண்ணெண்ணெய்.

18.நெடுஞ்சாலை மரங்கள்
நல்ல கா(ய்)ப்பு
விளம்பர அட்டைகள்.

19.கம்பந் தீவு தின்றே
களை கொத்துகிறான்
கொஞ்சம் மாதிரி மாணிக்கம்

20.ஆளானக் காலம்
நீந்துகின்றன,காற்றில்
சரக்கொன்றைப் பூக்கள்.






























21.இறந்த சிலந்தி வீடு
ஊஞ்சலாடுகிறது
ஆமணக்கு கிளை எறும்பு.

22.குட்டியாடோடு ஏசு
படுத்திருக்கிறார் வழியே   
தெருஓவியம்.

23.மழையே அமுதோ!
அமுதே மழையோ!
உயிர்க்கும் காய்ந்த மலை.

24.எருக்க மொட்டில்
விரல்கள் பதிய
பேசிக்கும் இசை.
       
25.எதிர்மாடியில்
பறிக்கும் சர்தாசி
தன் மகிழ மரம்.






























26.தங்கதொட்டில் குழந்தை
தாலாட்டுகிறாள்
பணிப் பெண்.

27.சாக்கடை ஏரி
பெருகும் சுவாரசியம்
பன்றி காதல்.

28.விட்டில்கள்
சிறகசைவில் இரை
மெழுகு விழி.

29.ஆடை இடுகிறாள்
முயல் பொம்மைக்கு,
வெறும்மேனி பாப்பா.

30.கிளை ஒடியும் சத்தம்
கேட்க வில்லை
வேர்கள் அழுகை.

























31.அணைத்தால் எரிகிறது
எரிந்தால் அணைகிறது
அற்புத இருள்.

32.அஞ்சு ரூவா கிளி சோசியம்
முடிந்த்து பேரம்
ஐந்நூறுக்கொரு பரிகாரம்.

33.விரும்பிய நிறமணிகிறாள்
தெரிகிறாள் நிதமொன்று
பர்தா மங்கை.

34.கத்துதலை நிறுத்த
கத்துவதைப் போட்டார்
குழந்தைக்கு ஊதி.

35.தலை போன தென்னை
தளைத்திருக்கிறது
குருவிக் குடும்பம்.




















36.மதிய உறக்கம்
வேட்டியில் விந்து
இளந் துறவி.

37.ஆபரண மூட்டை
கழுதையைச் சுண்டுகிறது
வழியோரப் புற்கள்.

38.ஐயா என்றால்
அறுபதாகிவிட்டது?என்கிறார்
வாலிபக் கவிஞர்.

39.யானை இளைப்பாற
தாங்காதோ?
முருங்கை நிழல்.

40.பீர்க்கம் பூவில்
தீனிக்கலையும் பூச்சிகள்
பாதிக்கிறது,இரசனை.




















41.புடலங்காய்
பார்க்க முடிவதில்லை
தொங்கும் கல்.

42.ஆ! நெல்லி
பறிக்கலையே யாரும்
ஓ! ஒடுவங்காய்.

43.பசுஞ்செடி
பாவமாயிருக்கிறது
ஒரு கிளை சருகு.

44.பாதாளக் கிணறு
மேயும் கோழி
பதற்றத்தில் கழுகு.

45.புழுக்கம்
உழைப்பு-ஒன்றோ!
வேர்வை.




















46.வேலையாள் இல்லை
 திண்டாட்டம்
 சாதியாள்.

47.வேட்டையாட வேண்டும்
மீன் பிடிக்க முன்
தூண்டில் புழு.

48.பூரா மூங்கிலும்
தருவதில்லை_ஒரு
புல்லாங்குழல்.

49.குனிந்து புடைத்தாள்
விரைந்து போனது
மனஅரிசி.

50.அழுகிறாள் ஆட்டுக்காரி
ஆறுதல் தந்த கணினி
மேடம் தற்கொலை.




















51.திரும்பி திரும்பிப்
பார்க்கிறாள்,புதிய
பாத்திரத்தில் முகம்.

52.பூங்காவில்
பொட்டல் காடு
நடைப்பாதை.

53.என்ன சொல்லும்?
காய் மரங்களில்
தொங்கும் செருப்பு.

54.தொலைவில் விளக்கு
பாதைக்கில்லை
வெளிச்சம்.

55.கூத்தாடி
ஒப்பனையில் வீடு
கட்சி அலுவகம்.




















56.துப்பினால் கூட
கூட்டம் வருகிறது
கிணற்றில் மீன்கள்.

57.உயிருள்ளது தீ
கண்டது எப்படி?
கேட்க இல்லை சமணர்.

58.கம்பம் எதிர்பட
கண்ணில் விழுகிறது
இறந்த மின் ஊழியர்.

59.அவ்வளவு லேசில்
கூடியதோ!பிடிபட
மரப் புன்னகை.

60.அவள் கன்னத்தில்
வானவில்
சோப்பு நுரைக்கு நன்றி.




















61.மாடு நுரை தள்ள
வேகமாய் நடக்கிறது
கரும்பு தின்னும் வேலை.

62.எந்த ஓவியக் காரிகையின்
தூரிகைச் சிந்தல்
அந்தி.

63.பபுல்கம் ஒட்டி
முதல்வகுப்பு பவுனா
பொத்தான்இல் குறை தீர்த்தாள்.

64.வசதியாவான் ஏழை
ஏழையாக வேண்டும்
மருத்துவம்.

65.பேராழி
தாங்க வில்லை
சிறுங்கல்.




















66.பெங்களூரில் வள்ளுவர்
குறள் பற்றோ!
சர்வக்ஞர் சிலை ஒப்பம்.

67.கரட்டடிவாரம்
மல்லிகைச் சுகந்தம்
நூணப் பூக்கள்.

68.பப்பாளி விதைகள்
பிதுக்கியடிக்கும் விளையாட்டு
குதூகலமாய் கைம்பெண்.

69.புதைக்குமோ! புசிக்குமோ!
இறந்த பிள்ளையோடு
செல்லும் தாய்ப் பூனை.

70.தூரம் ஆகிவிட்டால்
குளிர் காயும்
சூரியனை எறும்பும்.




















71.பன்னாடை விழுமோ!
காய்ந்த மட்டையில்
எலிக் குஞ்சுகள்.


72.தென்னிந்தியக் கல்லூரிகள்
விளம்பரத்தில் அரிது
திராவிடப் பெண்டிர்.

73.ஆறு நிரம்ப வெள்ளம்
அனல் வீசுது
துவைக்கல்.

74.எறும்புக் குழிகளைப் பெருக்கி
நீர் தெளித்தாள்,அத்தை
அரிசிமாக் கோலத்திற்கு.

75.கருந்திராட்சை நிலவில்
துயிலும் குறுஞ்சூரியன்
அவள் கோவம்.





















76.நகரச் சாலை
ஒற்றை குடை
காலணிக்காரன் கடை.

77.ஆறுதல் செய்ய
சிரிக்கும் கைம்பெண்
கரிமீசை சிறுமி.

78.திருவிழாவாய்
பள்ளிக்கூடம்
இன்ஸ்பெக்டர் வருகை.

79.சொடுக்கினாள்
கெக்கலிக்குது மழலை
அழைப்புமணி.

80.ஆணோ! பெண்ணோ!
வாழைக்கன்று
பரிகாரக் கல்யாணத்தில்.



















81.பிறந்த நாள் பரிசு
சினமூட்டியது
தோழன் சுணக்கம்.

82.பெண்டிர்க்கு அழகு
எதிர் பேசாமை
விளித்தாள் வாயாடி அத்தை.

83.மதுவிலக்கு கவியில்
தங்கம் வென்றான்
டாஸ்மார்க் ஊழியன்.

84.மீன் பிடித்த
திருநங்கையர் கைது
தடைசெய்த வலை.

85.ஓரப்பார்வை விட்டேன்
அஞ்சலக மேசையில்
பசைதோய்த்தவள் கைதடம்.




















86.தொடப்பக்குச்சி
திறவுகோலாச்சு
மண் உண்டியல்.

87.தைப் பனி
வெதுவெதுப்பில்-நீ
அமர்ந்த முக்காலி.

88.உப்பு கூடியும்
சப்பென்றே இருக்கு
உப்பளத் தொழில் ஊதியம்.

89.இருப்பார்களோ!
அன்னாடங்காச்சிகள்
அம்பானி ஊர்.

90.உமிழ்நீர் சுற்றி
எறும்புகள்
இனிப்பு நங்கையோ!




















91.வீட்டுக்காவலில்
கறையான்கள்
முற்றுகையிட்டது ஈசல்.

92.சூறை விளையாட்டு
சுக்குநூறானது
வரிக்குறமத்தாங்காய்.

93.ஓடைப்பக்கம்
கிள்ளும் மல்லிகை
சீத்தாப்பூக்கள்.

94.குழல் விளக்கு
பூச்சிகள் மரணக்கிடங்கு
தொங்கும் எண்ணெய்தாள்.

95.கிண்ணஎண்ணெய்
உருளும் பால்துளிகளில்
அம்மா விரல் வலி.






















96.களையெடுக்கும் மாதர்
குடிக்கின்றனர்
குளிர்ப்பானப் புட்டியில் கூழ்.

97.பூங்கா வழி
கோணலாய் போனது
காதலர் புத்தி.

98.முடியும் நேரமே
எப்போதும் வருகிறான்
சந்தைக்கு ஏழை.

99.ஊருக்குள் போக
இளையவளுக்குத் தயக்கம்
துருப்பிடித்த மிதிவண்டி.

100.கிராமத் தேநீர் கடை
வந்துவிடும் அன்றே
செய்தித்தாளில் பலகாரம்.



















101.பெருங்கவிஞர் வருகை
நெகிழ்ந்துப் பார்த்தேன்
காலி குறுஞ்செய்தி.

102.பனைமரம்
கழுத்துவரை மூழ்கியது
ஊணாங்கொடியில்.

103.லாரி மின்கலம் காட்டி
நகைத்தாள் மங்கை
தினம் NI  கவனி.

104.அதிகப்படும்
எடுபிடி அதிகாரம்
முதலாளி இல்லா நேரம்.

105.நூலக வாசல்
வரவேற்கிறது
தடதட மின் விசிறி.



















106.பண்டிதனுக்கும் சிரமம்
51ஆம் பக்கம் படிக்க
நூலக முத்திரை.

107.அலுவகக் கழிவறை
அவசரமாக வெளியேறினாள்
குறைந்தது தாய்ப் பால்.

108.ஆப்பிரிக்கப் பழங்குடிகளின்
புராதன ஓவியங்கள்
சாம்பார் தூள் பொட்டலத்தில்.

109.மண்ணெண்ணெய் விளக்கு
ஆயா எண்ணெய் சீசா
அப்பா மதுபுட்டிகள்.

110.எழுத்து கூடவே வந்தும்
பொருளிழந்து நிற்கிறது
எழுகோல் நிழல்.




















111.ஆடிக்கொண்டிருந்தது
எனக்கு முன்,
ஆழத்தில் விட்ட பந்து.

112.கனவு வெளியில்
காகிதப்பூக்கள்
ஊர்ந்து களைக்கும் வண்டு.

113.ரகசியம் சொன்னது
சன்னல் குஞ்சுகள்
பாட்டிகுருவி இருந்த மரம்.

114.தாம்பு மாடு
வாழ்க்கையோ!
தடாகத்தில் மீன்.

115.முஸ்தா பிள்ளை
அடம் பிடிக்கிறது
கிருஷ்ண வேடம்.




















116.வைரஸ் ஆயுதம்
கண்டும் வசப்பட வில்லை
வண்ணப்பருத்தி.

117.தேன் எடுத்த கை
குமட்டியது
பிய்யமர வாடை.

118.நேராகும்
சாலை
பிரியும் மலைகள்.

119.இசை அலைவரிசை
கேட்க வேதனை
நேரலை உரையாடல்.

120.உளுந்து தோல் விழியாள்
பேசினாள் நெருங்க
மிளகு மொழி.




















121.மின்சாரம் இல்லை
எச்சரிக்கை விடுக்கிறது.
குறை மின்கலம்.

122.தெரிகிறது வழி,
போக முடிய வில்லை
கண்ணாடிசன்னல் தும்பி.

123.தலை கழுவ
இன்றும் தொடர்கிறது
துணிசோப்பிடும் தந்தை.

124.முன்னிரவு மழை
தடங்கலானது
மாலைநேரக்கடை.

125.எளிய வாழ்வு பேச
ஆன்மீக அம்மா வந்தார்
58ஆயிரம் உருவா புடவையில்.




















126.சிரித்த குழந்தை
போதுமென்றது-இடறிய
கல் அடிக்கும் அம்மாவிடம்.

127.சமையல்காரன்
கைபக்குவம் காட்டியது
காய்கறி கட்டை.

128.ஒத்தையில் அவள்
எங்கும் சோடியாய்…
காலணி.

129.அலைப்பேசி பேச்சில்
சிலாகிக்கும் மழலை
காதில் ரிமோட் கண்ட்ரோல்.

130.ஊசியில் பிறப்பு
ஊசிப் போக வில்லை
தாயன்பு.




















131.எள்வயல் பூக்கள்
திரும்ப வைக்கிறது
அழுவுநாத்தி குரல்.

132.எலி கடித்த இளநீர்
தாகம் தணிக்குது
நிறைமாத அணில்.

133.அதுவும்
மகிழ்ச்சித் தருணமே!
என்னவள் ஏச்சு.

134.வாலாட்டியும்
பிரயோசனமில்லை
விலகாமல் மாட்டுத் தொணசி.

135.பிடித்தவர் கையொப்பமிட்ட
பரிசுநூல் கிடைத்தது
பழையபேப்பர் கடையில்.




















136.சமநிலை நெருங்க
பாடுபடுத்தும்
காய்ச்சல் நாக்கின் கசப்பு.

137.தண்டை நீரை
தட்டிவிளையாடும் குமரி
தணலாகும் மார்புநதி.

138.சவ்வுக் காயிதக் கூடாரம்
அகலாத நினைவில்
யானைக்கால் வாயாடி.

139.நுழையும் போதே
நிமிர வைக்கும்
அட்டைவீட்டு வெப்பம்.


140.விழுவதே இல்லை
ஆசாரி காதில்
குட்டைப்பென்சில்.




 














141.ஊர்ந்த சூடு
இறுகும் தாபம்
தனித்து கிடத்தல்.


142.வெயில் நாழிகையில்
மோதும் தென்றல்
இன்ப லேகியம்.

143.தேநீர்த் தூள் வாங்க
கூட்டிப் போனாள்,ரேணு
பனங்காய் வண்டி.


144.தையல்காரிக்கே
ஒரு வித அழகு
கழுத்தில் துணி டேப்


145.கட்டுதறியில் சோடியாய்
பண்ணைக்காரத் தாத்தாவின்
இருவேறு காலணி

புதன், 1 ஜூன், 2011

அய்க்கூ கவிதைகள்


  1.        மின்சாரப் பெட்டி-மறு      

             ஆயுதப்பூசைவரை
              இருந்தது பட்டை.

  
       2.       குற்றவியல் வழக்கறிஞர்¨   
                                                            வாயடைத்து நின்றார்
                                                                                  மழலை கேள்வி.
 

     3.                 கடற்கரையில் மழை
                                                        பாவம்…ஒண்டியாய்
                                                                    மணல் சிற்பம்.





 4.       பாலுறிஞ்சும் மகள்
                                                        கொறடா பிடியாய்…
                                                                       மார்பு தளருமோ! எண்ணம்.


   5.              ஆளுக்கொரு பக்கம் அவர்கள் 
                                                     ஒற்றுமைக்குச் சுற்றுகிறார் 
                                                                    நவக்கிரகம்.   
    
6.      நெடுஞ்சா  லையி  ல்¨      
                                                                                             பாழடைந்த நிழற்கூடம்
                                                              அம்மிக்காரி வீடு.
      
    7  .     குழல் விளக்கொளி
                                           வாசிக்கத் தடுக்கிறது
                                                         பூச்சிகள்.

          .8.    சருகை மிதியாதே!
                                                 உடைந்து விடும்
                                                         காற்றின் இசை.
      
      9.    கொறக் காடு
                                          நல்ல சாகுபடி
                                                           மண் விற்பனை.
     
10.     மல அடைகள்
          விலக்கிக் குளித்தனர்
             புனித நதி.